Tuesday, November 12, 2019

எந்த நிலை

எந்த நிலை வந்தாலும்....
வந்த நிலை மறவாதே....
( 🍀#ஓம் #நமசிவாய

சிதம்பர ரகசியம்...

சிதம்பர ரகசியம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்ப்பட்ட அறிவுமிக்கவன்..?

 அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்ப்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?

 திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.

 அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,

 காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,

 நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,

இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்,

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.

இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சரப் படி" என்று அழைக்கப்படுகின்றது,

அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.

 "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.

இந்தக் கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளைக் குறிக்கின்றது,
இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
 9 வகையான சக்தியைக் குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள்,
6 சாஸ்திரங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது...
ॐஓம் நமச்சிவாய ॐ

திருப்பதி சென்று முதலில் சந்திரன்

திருப்பதி சென்று முதலில் சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து, ராகு எனும் மலை மீது ஏறி திருமலை வந்து, கேது எனும் முடியை பரிகாரமாக தந்து, சனி எனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று, செவ்வாய் எனும் காவலரை கடந்து, குரு எனும் பக்தி மார்க்கம் கொண்டு, உச்ச புதனான பெருமாளை தரிசித்து,  சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று வெளியே வந்தால் கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு...

இதில் உள்ள சூழ்ச்சமம் என்ன வேனில், சந்திரன் ராகுவுக்கு எதிரி ஆகவே தாயார் திருப்பதியில் முதல் தரிசனம், பின்பு மனோ பலத்துடன் ராகு எனும் மலை ஏறினால், ராகுவின் எதிர்காரகமான கேதுவை நீச்ச படுத்த வேண்டும் அதாவது விரக்தி, தடை, பூர்வ ஜென்ம கர்மா போன்ற காரகங்களை நீச்ச படுத்த கேது எனும் முடியை பரிகாரமாக கொடுக்கிறோம், பின்பு கர்மா எனும் கூட்டத்துடன் பெருமாள் எவ்வளவு நேரம் காக்க வைப்பார் என்று தெரியாமல்(ஏனெனில் கர்மா தெரியாது) நிற்கிறோம், அப்படி நிற்கயில் கர்மா செவ்வாயை வைத்து சோதித்து பின்பு குரு எனும் பக்தி மேலோங்கி செல்கையில், புத்தியை தெளிய வைக்கும் உச்ச புதன் எனும் பெருமாளின் தரிசனம் கிடைக்கும், மனோ பலம் புத்தி பலம் சேர்ந்து சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று, பின்பு அவரின் ஆசியுடன் சுக்கிரனை சிறிது உண்டியலில் காணிக்கையாக போட்டுவிட்டு மனம் நிறைந்து நிற்கும் போது, நம் பசியாற வரும் அன்னம் எனும் நவகிரக கலவையை உண்ட பின்பு, கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு அதுவே லட்சுமி கடாக்க்ஷம்...

ஓம் நமோ நாராயணாய..

தர்ம_சாஸ்திரம்

தர்ம_சாஸ்திரம்

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்மசாஸ்திரம்

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு.  அவசியம் ஒரு முறையாவது படிக்க வேண்டுகிறேன்.

குரு தரிசனம்

கேள்வி பதில்
--------------------

1. குரு எல்லாம் குருவா ?

எல்லா குருவும் குரு அல்ல.
குரு முன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்.
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்.
குருவிடம் பணம் பேசக் கூடாது.

2. குருவை தேடுபவர் யார்?

குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?

குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

4. குருவைக் கண்டால் என்னவாக  உருவாகிறான்?

குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

5. குரு முழுமையானவராக சாட்சி என்ன?

குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி.

6. குரு என்பவர் யாருக்காக?

குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதூதர்.

7. குருவிடம் என்ன கிடைக்கும்?

குருவால் திருவருள் கிட்டும்.

8. குரு என்பவர் யார்?

குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்.

9. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?

இறைவனிடம் சேர்க்கும்.

10. நல்ல குருவை அறிவது எப்படி?

சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

11. குருவாக ஆவதற்கு வயது உண்டா?

தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

12. குரு தன்மை என்ன?

இறைத்தன்மை நிறைந்தவர்.

13. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?

முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

14. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?

பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம். நீ முன்னேறாமல் இருப்பாய்.

15. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?

முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு.

16. குரு சேவை எதற்கு?

குரு சேவை குருவுக்கு அல்ல. அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.

17. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?

குரு என்பவர் பாவ விமோட்சகர்.

18. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?

இறைதேடல், இறைதாகம், இறைப்பசி இருந்தால் நீ தேடுவாய்.

19. குரு என்பவர் கடவுளா?

உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்.

20. குரு என்பவர் எதற்கு?

குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு.
மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார்.

21. குரு கடவுளை அறியச் செய்வாரா?

குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

22. குருவின் மகத்துவம் என்ன?

தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

23. குருவை சோதிக்கலாமா?

அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

24. குருவை எவ்வாறு அறிவாய்?

மெய்யை மெய் அறியும்.

25. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?

குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

26. குரு பக்தி எப்படிப்பட்டது?

குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

27. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?

அவரைக் காண மனம் துடிக்கும். அவர் முன் அமர மனம் ஏங்கும்.
அவர் முன் மனம் அடங்கும். அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

28. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?

குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல. எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க
முடியும்.

29. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?

குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

30. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?

குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்.

31. குரு சிஷ்ய துரோகம் பாவமா?

தெய்வ நிந்தனைக்கு உரியது. பல  இழிபிறப்பைத் தரும்.

32. குருவாக முதல் தகுதி என்ன?

எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே குருவாக முடியும்.

33. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?

பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன் கூடியவனாக இருக்க வேண்டும்.

34. குருவுக்குள் அடங்கியது எது?

பிரபஞ்சமே அண்டம். அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே உள் அடக்கியவன் குரு.

35. குரு நேசம்?

சிவ நேசம்.

36. குருவால் முக்தி தர முடியுமா?

குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

37. குரு எதையாவது தேடுவாரா?

தேடுவார். நல்ல சிஷ்யனை.

38. குருவுக்கு ஞானம் எங்கிருந்து  கிடைக்கிறது?

இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது.

40. குருவிடம் குருட்டு நம்பிக்கை  வைக்கலாமா?

உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

41. குருவுக்குள் கோயில் கொள்வது எது?

இறைவன்.

42. குரு பாவத்தை போக்குவாரா?

குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார்.
பாவத்தை அனுபவித்து கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

43. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?

நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

44. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?

குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு).

இரும்பாக இருந்தாலும் துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும்.

45. குரு வேதம் ஓத வேண்டுமா?

மானசீக பூஜையுடன் மானசீகமாக  இறைவனாகவே இருப்பார்.

46. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?

இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

47. குருவை மறந்தால்?

தெய்வம் மறக்கும்.

48. குருவிடமிருந்து விலகியவன்?

தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.

49. குருவை வஞ்சிப்பது?

தெய்வக் குற்றம்.

50. குருவின் வெளிப்பாடு யாது?

 மெய் ஞானம்.

சிவனே என்றிருப்பது என்றால்

சிவனே
     என்றிருப்பது
         என்றால்🔥🧘🏻‍♀

1) மனம்
     அமைதியாக
     இருப்பது
     என்று பொருள்

2). வீணான                      
      எண்ணங்களில்      
      இருந்து
      விடுபட்டிருப்பது    
      என்று பொருள்

3). கவலையிலிருந்து  
      விடுபட்டிருப்பது
      என்று பொருள்

4).  எல்லாப்  
       பொறுப்பையும்
       அவரிடம்    
        கொடுத்தாகி
       விட்டது என்று
       பொருள்

5)    எல்லாம்
        நன்மைக்கே
        என்று பொருள்

6).    எதனாலும்
        குழப்பமடையாத
        நிலை
        என்று பொருள்

7).  ஆடாத,அசையாத  
       நிச்சய புத்தி
       உடைய மனம்  
       என்று பொருள்

8).  மனம்
       லேசாகவும், முகம்  
       மலர்ந்திருக்க  
       வேண்டும்  
       என்பது பொருள்

9).   எந்த ஒரு  
       சூழ்நிலையிலும்  
      திருப்தியாக
      இருப்பது என்று  
      பொருள்

10). தன்னிடம்
        வருபவர்களின்
        மனதை அமைதி    
        அடைய    
        வைப்பது
        என்பது    
        பொருள்

11).  ஏகாந்தத்தை
        அனுபவிப்பது  
        என பொருள்

12).   சதாகாலம்
         அவரையே  
       நினைத்திருப்பது        
       என்பது பொருள்

13).  எந்த ஒரு
        சூழ்நிலையிலும்  
        நிம்மதியாக
        இருப்பது என்று  
        பொருள்

14). தன்னால்  
        பிறரும் பிறரால்  
        தானும்  
       துக்கமடையாத
       நிலை என  
       பொருள்...

15).  உலகீய
         பொருட்களில்
         சாரமில்லை
         சிவமே
         இன்பம் என  
        நிலைத்தி  
        ருப்பதாக  
        பொருள்...

இப்படி பரம்பொருளான தந்தை ஈசனை என்றும் நினைத்து அவர் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது ஒன்றே சிவனே என்றிருப்பது. என பொருள்படும்.

அன்பே🔥சிவம்