Monday, November 4, 2019

"ஐந்தவித்தான் ஆற்றல்

" தெரிஞ்சுகோங்க மக்கா!"
""""""""""""""''"'"""""""""""""""""""""""""""""""""""""
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்          விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி" இதில் வரும் "இந்திரன்" யார்????

"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே "திரு" இதில் திரு என்று அழைக்கப்படும் மாஹாலக்ஷ்மி யார்????

"மடியிலா மன்னவன் எய்தும் "அடியளந்தான்" தாஅய தெல்லாம் ஒருங்கு" இதில் மூன்று அடியால் உலகளந்த அடியளந்தான் யார்?????

துரதிர்ஷ்டவசமாக தமிழர்களை தமிழை தவிர வேறு எந்த மொழியையும் சரிவர கற்க முடியாமல் செய்துவிட்டனர். பின்னர் திராவிட ஆட்சியில் தமிழையும் சரிவர கற்பிக்காமல் திரைப்பட மோகத்தில் தமிழர்களை ஆழ்த்தி தமிழையும் மறக்கடித்து விடுவது தான் இவர்களின் உள்நோக்கம். சில நாட்களுக்கு முன் ஐயன் வள்ளுவர் ஒரு கிருத்துவர் என்று ஒரு கும்பல் கம்பு சுற்றியது. யார் என்ன சொன்னாலும் அதை நம்பும் மனநிலைக்கு வந்துவிட்ட தமிழர்கள் நாளை அதுவே உண்மை என்றும் நம்பக்கூடும்.

No comments:

Post a Comment