Saturday, January 31, 2015

கிருஸ்ணன் பிறப்பு ஏன்

   இறைவன் ஒருவன். அவன் வானத்தில் இருக்கிறான்.

வானத்திற்கு அப்பாலும் இருக்கிறான். பூமியில் இருக்கிறான். பூமிக்குள்ளேயும் இருக்கிறான். பூமியாகவும் இருக்கிறான். இப்படி அவன் இல்லாத இடம் என்பதே இல்லை. நோக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருளென்று, அவனை ஞானிகள் பாடுவது இதற்காகத் தான். கண்ணில் தெரியும் காட்சி, தெரியாத காட்சி, காதுகளில் கேட்கும் ஒலி, கேட்காத ஒலி, புலன்கள் அறியும் பொருள், அறியாத பொருள் அனைத்துமே அவனே. அத்தகைய சர்வ வியாபியாகிய இறைவன் பூமிக்கு வருவானா? மனிதர்களோடு மனிதராய் நடமாடுவானா? திசை தெரியாமல் தடுமாறும் நெஞ்சங்களுக்கு நல் வழிகாட்ட துணை இருப்பானா? என்று ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கும் நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கிறது.

நமது புராணங்களும், இதிகாசங்களும் தர்ம சாஸ்திரங்களும் இறைவன் பூமிக்கு வருவான். மனிதனருகில் மனிதரைப் போலவே நடமாடுவான். அவன் பெயர் அவதார புருஷன் என்கிறது.. அவதாரம் என்றால் என்ன?   அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு மேலே இருந்து கீழே இறங்கி வருதல் என்பது பொருளாகும். அவதார புருஷன் என்றால் மேலே மிகவும் மேலே மனிதர்களால் எட்டிப்பிடிக்க முடியாத மாபெரும் உயரத்தில் இருந்து நமக்காக மண் மீது புழுதிபடிய வாழ்வதற்காக இறங்கி வந்த பரமாத்மா என்பதாகும். எதற்காக பரமாத்மா இறங்கி வரவேண்டும்? இறைவன் என்ற நிலையில் சகலவிதமான திருக்கோலத்தில் அவனுடைய சந்நிதானத்திலேயே இருக்க வேண்டியது தானே. மனித ஜென்மங்களை திருத்த வேண்டுமென்றால், இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், உட்கார்ந்த இடத்திலேயே ஒரே நொடியில் செய்து விடலாமே? அதை செய்யாமல் எதற்காக இறங்கி வரவேண்டும்?

சர்வ வல்லமே பொருந்திய நானே! சர்வலோகத்தை படைத்த நானே!! உனக்காக இறங்கி வருகிறேன் என்றால், அற்ப மானிடன் நீ! எம்மாத்திரம் உன் ஆணவத்தை விட்டு இறங்கு. உன் ஆசையை விட்டு இறங்கு. உன் மோகத்தை விட்டு இறங்கு. என்று நமக்கு பாடம் புகட்ட இறங்கி வருகிறான். அது மட்டுமல்ல, மனித சரீரத்தை தற்காலிகமாக பெற்ற அவன் அந்த சரீரத்திற்கு சம்பளமாக சில துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறான் அது ஏன்? கடவுளாகிய நானே மாமிச வடிவத்தில் வந்து விட்டால், துக்கப்பட்டு ஆகவேண்டும். விதைத்த விதையை, அறுத்தாக வேண்டும். நீயும் அப்படிதான் விதி என்ற வட்டத்திலிருந்து ஓடிவிட முடியாது. கர்மா என்ற நீதிதேவனின் சட்டத்தை உன்னால் மீறி விட முடியாது. படு நன்றாக படு. அவமானப்படு. ஆடை துவைக்கப்படுவது போல், அலைகளில் அகப்பட்ட துரும்பு பாறைகளில் மொத்தப்படுவது போல், துக்கப்படு. அப்போது தான் உன் ஆத்மாவின் அழுக்கு வெளுக்கும். பிறவியின் வினை வெந்து மடியும் என்றும் நமக்கு உணர்த்தவே.

அவதாரத்தின் நோக்கம் இது மட்டுமல்ல. இன்னும் இருக்கிறது. குழந்தை பெறுகிறோம். அந்த குழந்தை நமது இரத்தத்தாலும், மாமிசத்தாலும் உருவானது தான் என்றாலும், அதை பார்க்கும் போதெல்லாம் ஆனந்த பரவசம் நமக்குள் ஊற்றெடுத்து ஓடுகிறது. குழந்தையை அணைப்பது இன்பம். தோளில் சாய்ப்பது இன்பம். இடுப்பில் சுமப்பது இன்பம். விரல்பிடித்து நடக்க வைப்பது இன்பம். அது ஓடினால் இன்பம். ஆடினால் இன்பம். பாடினால் இன்பம். குழந்தையின் ஒவ்வொரு செயலுமே நமக்கு இன்பம். இந்த இன்பத்தை விட்டு விட்டு குழந்தையை அணைக்கும் சுகத்தை விட்டு விட்டு காசு, பதவி அழைத்தாலும் தாசியின் மடி வலைவீசினாலும் அங்கே நாம் போவோமா? ஒரு நல்ல மனிதன் தாயின் பாதங்களிலும், குழந்தையின் விரல் நுனியிலும் சொர்க்கத்தை காண்பான். அந்த நல்ல மனிதனை போன்றவன் தான் இறைவன்.

இறைவனுக்கு நாம் குழந்தை இறைவனால், படைக்கப்பட்ட ஜீவன் நாம் அவன் எங்கோ இருந்து சூட்சமக் கயிற்றை அசைக்கிறான். நாம் ஆடுகிறோம். இருட்டிலும், வெளிச்சத்திலும் அவனே நம்மை வழி நடத்துகிறான். கல்லும் முள்ளும் குத்தி கீழே விழுந்தால் வேலும், அம்பும் பாய்ந்து இரத்தம் வடிந்தாலும், கன்னியரின் வளைகரங்கள் அணைத்தாலும், பதவியின் நாற்காலிகள் நமக்கு வரவேற்பு சொன்னாலும், அத்தனையும் இறைவன் கொடுத்த கொடை என்று அவனையே நினைக்கிறோம். அவனுக்காகவே வாழ்கிறோம். அப்படி நம்மை அவன் வாழ வைக்கிறான். அவன் சொற்படி எல்லாம் நடக்கும் மனித குலத்தோடு ஒட்டி உறவாட உலகத்தின் தகப்பனுக்கு ஆசை பிறக்கிறது. அதனால், அவன் அவதாரம் எடுக்கிறான்.




இறைவனான நாராயணன் எடுத்தது எத்தனையோ அவதாரங்கள். மோகினி அவதாரம், நர நாராயணன் அவதாரம், வியாச அவதாரம், கபில அவதாரம், புத்த அவதாரம் என்று எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், அவைகளில் பத்து அவதாரங்கள் மட்டும் வைதீக நெறிப்படி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மற்றவைகளை விட, தசாவதாரங்களை சிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று நமக்கு தோன்றுகிறது. மோகினி அவதாரம் தேவர்களை காக்க எடுத்தது புத்த அவதாரம். தத்துவத்திற்காக எடுத்தது இவைகளில் குறிப்பிட்ட ஒரே நோக்கம் மட்டும் தான் உண்டு. ஆனால், சிறப்பான பத்து அவதாரங்களில் ஒரு நோக்கம் மட்டுமல்ல, அத்தனை நோக்கங்களும், உலகம் சார்ந்ததாக, பிரபஞ்சம் சார்ந்ததாக, விஞ்ஞானம் சார்ந்ததாக இருக்கிறது.

அப்படி சிறப்பு வாய்ந்த பத்து அவதாரங்களில், பரிபூரண அவதாரமாக ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே கருதப்படுகிறது அது ஏன்?  மச்சமாக மாதவன் வந்தபோது கடவுளின் அதீத சக்தி மட்டுமே வெளிப்பட்டது. நரசிம்மம் வரையிலும் அது தான் கதை ராமனாக அவன் அவதாரம் செய்தபோது தான் இறைவன் என்பதை பலநேரங்களில் மறந்துவிட்டான். அதனால், தான் தசரதன் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதான். ஜானகியை தொலைத்து விட்டு தேடி அலைந்தான். உலகத்தவர் நம்பிக்கைக்காக சீதையை, தீக்குளிக்க வைத்தான். தனது தம்பிமாருக்கு தண்டனை கொடுத்ததற்காக சரயு நதியில் மூழ்கினான். ஆனால், கிருஷ்ண அவதாரம் மனிதனாக வாழ்ந்தாலும் தான் இறைவன் என்பதை மறக்காத அவதாரம் பிறந்த நிமிடம் முதல், வேடனின் அம்பு பட்டு உடல் சட்டையை உதிர்த்த நிமிடம் வரை சிரிப்பை மட்டுமே முகத்தில் கொண்ட அவதாரம்.

நான் கடவுள் என்பதை கிருஷ்ணன் மட்டுமே அறிந்து வைத்திருந்தான். அந்த நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. தான் கடவுள் என்பதை தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அறிவுறுத்தியே வாழ்ந்தான். கெளரவசபை யில் துரியோதனன் உள்ளிட்ட அனைவரின் முன்னிலையில் நானே உலகத்தின் மூலப் பரம்பொருள் என்ற விஸ்வரூப தரிசனத்தை கண்ணன் காட்டினான். இதே தரிசனம் அவனிடம் நாரதரும், உதங்க மகரிஷியும், அர்ஜுனனும் பெற்றிருக்கிறார்கள். கடைசியாக மாவீரன் கர்ணனும், விஸ்வரூப தரிசனத்தை பெற்றான். கண்ணன் கடவுள் என்பது அவன் வாழும் போதே எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் கிருஷ்ண அவதாரம் பரிபூரண அவதாரம் என்று போற்றப்படுகிறது. ராம அவதாரம் அருள்நிறைந்ததாக இருந்தாலும், சிறிது குறைவுடனே இருக்கிறது.


ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை மகாபாரதத்தில் உள்ள ஆதிபர்வதம் என்ற பகுதி மிக அழகாக சொல்கிறது. வெகுகாலத்திற்கு முன்பு, வானுலகில் தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட அசூரர்கள், பூமியில் சண்டைபோட்டு மண்டை உடைப்பதில் ஆர்வம் உடைய அரசகுலங்களில் தோன்றினார்கள். மக்களை மறந்து, மனசாட்சியை மறந்து, மனுதர்மத்தை மறந்து கொடுங்கோல் செய்தார்கள். இதனால், பூமியெங்கும் அதர்ம காற்று வீசியது. அராஜகப் பதாதைகள் பட்டொளி வீசிப் பறந்தன. பூமியின் பாரமும் கூடியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீ நாராயணனை தேவர்கள் வேண்டினார்கள். நாராயணனும், யதுகுலத்தில் வசுதேவரின் புத்திரனாக ஸ்ரீ கிருஷ்ணர் என்ற திருப்பெயரோடு தோன்றினார் என்று கிருஷ்ணனின் பூமி வருகைக்கு முத்தாரம் பதிக்கிறது.

   துவாபர யுகத்தின் முடிவில் அவதாரம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணன், எந்த சங்கல்பத்தை எடுத்துக் கொண்டான் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணம் நமக்கு தெளிவு படுத்துகிறது. அநீதி கும்பல் நிறைந்த பூமியின் பாரம் குறைக்கப்பட வேண்டும். அதற்காக மாபெரும் யுத்தம் நிகழவேண்டும். தன்னை நாடியவர்களும், தர்மத்தின் வழியில் நின்றவர்களும் காக்கப் படவேண்டும். தனது வாழ்வின் வழியாக தர்மங்களும், தத்துவங்களும் போதிக்கப்பட வேண்டும். தனது லீலா வினோதங்கள் பக்தி மார்க்கத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும். அதனால், மனிதனாக பிறந்தாலும், மனிதத் தன்மையோடு வாழ முடியாத கடைசி ஜீவனும், இறைவனின் பாதங்களை தொடுகின்ற தகுதியை பெறவேண்டும் என்பதே ஸ்ரீ கிருஷ்ணனின் முழுமையான நோக்கமாகும். இதற்காகவே அவன் பூமியில் பிறந்தான்.




Friday, January 30, 2015

*** LAPTOP USERS: BE AWARE! ***





*** LAPTOP USERS: BE AWARE! ***
A couple lost their 25 year old son in a fire at home on June 4th. The son who had graduated with MBA, two weeks earlier had come home for a while. He had lunch with his dad at home and decided to go back to bed.His father told him to wait, to meet his mother, before he went back for a few days. He decided to take a nap while waiting for his mom to come back home from work. Some time later their neighbors called 911 when they saw black smoke coming out of the house.
Unfortunately, the 25 years old died in the three year old house. It took several days of investigation to find out the cause of the fire.
It was determined that the fire was caused by the laptop resting on the bed. When the laptop was on the bed cooling fan did not get the air to cool the computer and that is what caused the fire. He did not even wake up to get out of the bed because he died of breathing in carbon monoxide emitted out of burnt laptop.
The reason I am writing this to all of you is that I have seen many of us and also our brothers& sisters sons&daughters friends&family using the laptop while in bed. Let us all decide and make it a practice not to do that. The risk is real. Let us make it a rule not to use the laptop on bed with blankets and pillows around. Please educate as many people as you can.
MUST SHARE.....

Wednesday, January 28, 2015

A – Apple, B – Ball என்று பொருளை

A – Apple, B – Ball என்று பொருளை உதாரணமாகக் காட்டி மொழியை சொல்லிக் கொடுத்த உலகில்...

அ – “அறம் செய்ய விரும்பு” , ஆ – “ஆறுவது சினம்” என்று அறத்தையும், பண்பையும், வீரத்தையும் உதாரணமாக காட்டி மொழியை சொல்லிக் கொடுத்ததால்...

தமிழ் மொழியே உலகின் சிறந்த மொழியாகும்…!

உலகின் முதல் நரம்பிசைக்கருவி முழுக்க முழுக்க தமிழனுக்கு சொந்தமானது ‪#‎யாழ்‬

உலகின் முதல் நரம்பிசைக்கருவி
முழுக்க முழுக்க தமிழனுக்கு சொந்தமானது

‪#‎யாழ்‬

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன்

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்




நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் இவ்வளவு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

தமிழன் வருவான்

Home Remedies for Throat Infection

1. Salt Water Gargle
The antiseptic of the salt water can reduce you from the throat infection. Take a glass of warm water and then pour half teaspoon salt. Now, gargle several times using salt water. Please be careful that you are not swallowing the water. You must spit the water out when you finish gargling. To improve the condition you can use this method at least four times in a day.

2. Honey
The easiest ingredient is honey that can cure you from the throat problem. The antibacterial properties of honey can work to heal you from the sore throat. It is simple enough. Just add one or two tablespoons of honey with one cup of lukewarm water. Mix them and drink it several times a day. You can take simply honey just before going to sleep when you feel bad with sore throat.

3. Lemon
Yap, lemon even can get rid you off from the sore throat. You just need to take a couple of slices of lemon, salt and pepper. Sprinkle the salt and pepper over the lemon slices and then lick the lemon slowly.
You can gargle with the lemon juice by mixing it with warm water also. You can add a few drops of honey if you want. The mixture of lemon, warm water and honey can help you to get rid of the sore throat.

4. Power of Garlic
Garlic is not only for cooking! It can be also used to reduce the sore throat. The antibacterial and antiseptic contents can help you to get rid of the sore throat. You have to cut fresh garlic into pieces. It would be better if you can split the garlic using your teeth. It will kill the chemical allicin which is responsible for sore throat.
You can also use the garlic oil. Just take a few falls of garlic oil to ¼ of a cup of water. Use this over the throat regularly.
Eat raw and cooked garlic. Garlic pills can be taken if you can’t bear the taste of garlic.


5. Cinnamon
Cinnamon is helpful to reduce your sore throat. Take a pinch of cinnamon powder, one pinch of paper and a little water. Mix all three together and boil for a decent while. Add a teaspoon of honey to it. Take the boiled mixture from the over and drink this slowly. Continue this remedy for at least one week.

6. Apple cider vinegar
Take two tablespoons of apple cider vinegar and mix it with a cup of lukewarm water. Then, mix and drink it slowly.

7. Control Food Items: Always make sure that you are not taking spicy foods too much. You will have to control drinking cold water and ice-cream to control the sore throat.

MUST SHARE THIS WITH YOUR FRIENDS & FAMILY


சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?




சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?

நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். 

எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கலவரப் படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சிடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். 

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சிடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். 

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். உடனே சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். 

மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும் திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச் செல்வோம்.

வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லை என்றால் இந்த வழியில் உங்கள் கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஷட் டவுண் செய்து மின் இணைப்பை எடுத்துவிட்டீர்களா! இனி தட்டையாக உள்ள ஒரு ஸ்குரூ டிரைவரை எடுங்கள். 

சிடி டிரைவின் கதவின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில் மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக் கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும். 

டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள் இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம் இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு திறக்கப்படும்.

சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில் ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம். இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். போகாத பிடிவாத அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி கொண்டும் சுத்தப்படுத்தலாம். 

இனி மீண்டும் கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து மூடுவதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

சரி, இந்த ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்? மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின் டிரைவ் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரூகளை எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின் கதவைத் திறக்கலாம். 

அல்லது டிரைவை மட்டும் தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும் இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின் புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.

முழுப்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்

முழுப்பெயர்
தீர்த்தகிரி கவுண்டர்
தந்தை ரத்னசாமி கவுண்டர்
தாய் பெரியாத்தா
பிறப்பு 17 ஏப்ரல் 1756
மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
இறப்பு 31 சூலை 1805
சங்ககிரி, தமிழ்நாடு
அடக்கம் ஓடாநிலை, ஈரோடு, தமிழ்நாடு
மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

வரலாறு

தீரன் சின்னமலை ஓடாநிலை மணிமண்டபம்
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.





இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

இவனை பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்

தமிழன் வருவான்


உலகின் அதிசயம் எனக் கூறப்படும்

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது !

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம்.





இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக் காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!

பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது

பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந் திய விடுதலைப்போராட்டத்தின்போ து ‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வாச கம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந் தியரின் பேச்சிலும், மூச்சிலும் உ றைந்துபோய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவசெ ய்து, விடுதலைக்கான வீர தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய

மக்களின் கருத்தில் விதைக்கப்பட்டது.

இந்த தகவலுக்கு மாறாக, ‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை முதலில் அறிவித்து பிரகட ணப்படுத்தியவர் ஒரு தமி ழர்தான் என்ற அரிய செ ய்தியும், அந்த வீர தமிழனி டம் உலகை யே ஆட் டிப் படைத்த சர்வாதிகாரியா ன ஹிட்லர் மன்னிப்புக் கே ட்ட பெருமைக்குரிய வர லாறும் தற்போது தெரிய வந்துள் ளது.

‘ஜெய் ஹிந்த் செண்பகராமன்’ என்ற நூலி னை வரலாற்று ஆசிரியர் ‘ரகமி’ என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்ப ட்ட அந்த பெருமைக்குரிய தமி ழனின்பெரும்பங்கு ஆதார த்துடன் பதிவுசெய்யப்பட்டு ள்ளது.

குமரியில் பிறந்த செண்பக ராமன் சிலகாலத்திற்குபின் திரு வனந்தபுரத்தில் பள்ளி ப்படிப்பை முடித்திருக்கிறா ர்.மாணவராக இருந்த கால ங்களிலேயே இந்திய விடுத லைக்காக பல்வேறு போரா ட்டங்களில் செண்பகராம ன் ஈடுபட்டார்.

இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளி யான ‘சேர் வால்டர் வில்லி யம் ஸ்ரிக்லாண்ட்’, செண்பகராமனின் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலை யும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் அவருக்கு உதவி செய்தார்.

அவரது உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராம ன் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்ம னி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திரு க்கிறார். இத்தாலியில் இருந்தபோது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார். பின்னர், சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொட ர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனி யின் தலைநகரான பெர்லினில் பொ றியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதே ச கமிட்டிமூலம் இந்திய விடுதலைக்கு செண்பக ராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஜெர்ம னி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்த து. 1930-இல் இந்திய வர் த்தகசபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகரா மன் நியமிக்கப்பட்டார்.

1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்டபோது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்ட து. 1933-இல் வியன்னாவில் நடை பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை முதன்முறையாக சந்தித்தார், செண்பகராமன். இந்தி ய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட் டம்பற்றி கேள்விப்பட்டிருந்த சுபா ஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந் திய தேசியப் படை குறித்து செண் பகராமனுடன் கலந்தா லோசித்து இருக்கிறார்.

அந்த சந்திப்பின் முடிவில், தான் எப்போதும் சொல்லும் ‘ஜெ ய் ஹிந்த்’ என்ற மந்திர வார்த்தையை செண்பகராமன் உச் சரித்து இருக்கிறார். அந்த வாசகம் சுபாஷ் சந்திரபோசை வெகுவாக ஈர்த்தது. அதனையே தனது தேசிய ப்படையின் தாரக மந்திரமாக்கினா ர். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.

செண்பகராமனைப் பற்றிய இன் னொரு சம்பவமும் இந்நூலில் பதி வு செய்யப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை உலகுக்கு பறை சாற் றம் அந்த உன்னத சம்பவம் ஒன்று போதும்; ‘தமிழன் என்று சொல்ல டா-தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அற்புத வரிகளி ன் முழு பொருளையும் நாம் உணர் ந்துக் கொள்ள முடி யும்.

ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக்கொ ண்டிருந்தபோது “சுதந்திர ம் பெறக்கூடிய தகுதி இந்தி யர்களுக்கு கிடையாது” எ ன்று கூறினார். இந்த கருத் து அருகில் இருந்த செண் பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. “இந்தியா வின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைக ளைப்பற்றி தரக்குறைவாக நீங்கள்பேசுவதை என்னால் அனுமதிக்கமுடியாது” என்று ஆவேசமாக கூறிய செண்பக ராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையி லும் உலகமே பார்த்து மிரண் ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.








அடுக்கடுக்கான ஆதாரங்களுட னான செண்பகராமனின் வாத திறமையை கண்டுவியந்துபோ ன ஹிட்லர், இறுதியில் பணிந் தார். தன்னை மன்னித்துக் கொ ள்ளும்படி அவர்கேட்க செண்பக ராமனோ, வார்த்தைகளால் மன் னிப்பு கேட்பதைவிட எழுத்துப்பூ ர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.

இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும்கோபத்தை ஏ ற்படுத்தியது. செண்பக ரா மனை கொல்ல சதிசெய் து சாப்பாட்டில் விஷத்தை வைத்து அவரை கொன்ற னர். செண்பகரா மன் 26-5-1934அன்று மரணம் அடை ந்தார்.

“தொட்டிலில் அழும் பிள் ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்” என ஜெர்மனி யில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோ லனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து பேசு வதென்றால் சாதாரண காரியமா?

அறிவிலும், துணிவிலும் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்தபடி, இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரன் செண்பகரா மனைப்பற்றி ஜெய்ஹிந்த்’ புத்தகத்தின் வாயிலா க வரலாற்று ஆசிரியரான ரகமி, மேலும் பல அருமையாக நிகழ்ச்சிகளை யும் வெளி உலகத்திற்கு தெ ரிவித்திருக்கிறார்.

செண்பகராமனைப் போல் வரலாறுகளி ல் மறைக்கப்பட்ட பல தமிழ் மாவீரர்க ளை நினைத்து வேதனைப்படும் முற் போக்கு சிந்தனையாளரும், கூட 

இருந்தும் அவா் புகைப்படம் கிடைக்க வில்லை

தமிழன் வருவான்

The aloe vera miracle:

The aloe vera miracle: A natural medicine for cancer, cholesterol, diabetes, inflammation, IBS, and other health conditions...Must Share

• Halts the growth of cancer tumors.
• Lowers high cholesterol.
• Repairs "sludge blood" and reverses "sticky blood".
• Boosts the oxygenation of your blood.
• Eases inflammation and soothes arthritis pain.
• Protects the body from oxidative stress.
• Prevents kidney stones and protects the body from oxalates in coffee and tea.
• Alkalizes the body, helping to balance overly acidic dietary habits.
• Cures ulcers, IBS, Crohn's disease and other digestive disorders.
• Reduces high blood pressure natural, by treating the cause, not just the symptoms.
• Nourishes the body with minerals, vitamins, enzymes and glyconutrients.
• Accelerates healing from physical burns and radiation burns.
• Replaces dozens of first aid products, makes bandages and antibacterial sprays obsolete.




• Halts colon cancer, heals the intestines and lubricates the digestive tract.
• Ends constipation.
• Stabilizes blood sugar and reduces triglycerides in diabetics.
• Prevents and treats candida infections.
• Protects the kidneys from disease.
• Functions as nature's own "sports drink" for electrolyte balance, making common sports drinks obsolete.
• Boosts cardiovascular performance and physical endurance.
• Speeds recovery from injury or physical exertion.
• Hydrates the skin, accelerates skin repair.

Share it with others

Sunday, January 25, 2015

கலியுகம் - இந்தியாவின் வரலாறு!

கலியுகம் - இந்தியாவின் வரலாறு!
கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார்.

"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத் தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"

- சந்திர ரேகை -

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும் சொன்னார்"

- சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......

ஆட்சியாளர்கள்
ஆண்டு
பரீட்சித்து மன்னன்
500
சனமேசெயன்
300
நரேந்திரன்
288
சாரங்கன்
85
விக்கிரமாதித்தன்
2000
சாலிவாகனன்
349
போசனராசன்
500
சுப்பராயலு
695
கர்த்தாக்கள்
85
இஸ்லாமியர்
62
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
73
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
96
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
40

இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....

இந்த பட்டியலில்..

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்" 73 ஆண்டுகள்

"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்

"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40 ஆண்டுகள்

இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லொருக்கும் தெரிந்ததே..கோரக்கர் கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம் அடைந்த போது கலியுகத்தின் வயது 5073 ஆண்டுகளாகும்.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர் அகிலசக்கர கொடியுடனே அழியாமல் பான்மையுடன் அரசாள" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய் மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம் பொறித்த இந்தியக் கொடி என்பதாக அனுமானிக்கலாம்.

இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும் சொல்லியுள்ளார் என்று கோரக்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல், சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும் அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி!

தமிழன் வருவான்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை


இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை.

இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார்.





இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை .

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கி யுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. 

ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப்பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறாா்

1. நாம் நல்லா இருக்க வேண்டும்




1. நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.

2. எவ்வளவு கடும் கோபத்திலும் பொறுமையாக இருக்கும் பக்குவம் வந்து விட்டால், நம்மால் எவர் மனமும் இரணமாகாது.

3. நமக்கு சந்தேகம் என கேள்வி கேட்கும் போது, கேட்பவரை எதிரியாக பார்த்துக் கொண்டே கேட்டால் அவர் சரியான பதிலையே சொன்னாலும் நம் தலையில் ஏறாது.

4. வேலி இல்லாக் காட்டில் பூவாக இருப்பதைவிட , வேலியிட்ட நந்தவனத்தில் பூவாக இருக்கும் சுதந்திரமே நமக்கு பாதுகாப்பானது.

5. எந்த விடயத்தையும் மதிப்பீடும் போது, நிறைகளைக் கூறி பின் குறைகளைச் சுட்டிக் காட்டினால், கேட்பவர் மனம் மகிழும்.

6. பெரிய பெரிய விடயங்களை புத்திசாலித் தனமாக பேசுவதை விட சிறிய சிறிய விடயங்களை கூட மனம் விட்டு பாராட்டுவதில் தான் உண்மையான பக்குவநிலை இருக்கிறது.

7. நாம் விரும்பும் எல்லாவற்றையும் செய்து சுயநலமாய் இருப்பதை விட, அடுத்தவருக்காய் செய்யும் செயலை விருப்பத்துடன் செய்து பொதுநலமாய் இருப்பது அர்த்தமானது.

8. நம்மை தேடி வழியன வரும் நல்லதை/உதவியை அப்படியே ஏற்பதற்கு முன் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். ஒரு வேளை அது நமக்காக வீசப்படும் வலையாகக் கூட இருக்கலாம்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா


காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருனைக் கொள்

இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள் வரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.




அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார் அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன் சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர் சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது.

7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். எட்டயபுர மன்னர் அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். 

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதி படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார் நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார் அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார் அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி. தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார்.

நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார். 1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார் 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார் 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவணம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவணம் பாரதி பக்கம் திரும்பியது பாரதியை கைது செய்ய முனைந்தனர் அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார்.

அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார். 

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார்.

பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு


பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது 1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேரினார் பாரதி அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை.

பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார் அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது. பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு. “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி.

இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார்பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர் அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார் பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார் அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான் மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை.

நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

இவன் தமிழன்என்பதில் நாம் பெருமை கொள்வோம்

தமிழன் வருவான்

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?


ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். 

வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். 

எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் 

இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். 

ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். 

வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.
அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். 

சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். 

கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். 

மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, 
சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.


Friday, January 23, 2015

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2015வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.